முகப்பு
தமிழ்நாடு

தேர்தலில் வெளிநாட்டினர் வாக்களிப்பு! விசாரணையில் திடீர் திருப்பம்

தேர்தலில் வெளிநாட்டினர் வாக்களித்த விவகாரத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்படுகிறது.

Updated On : 9 ஜூன் 2026, 12:47 pm IST
கோப்புப் படம் - File photo
பகிர்:

வெளிநாட்டினர் வாக்களித்திருக்கலாம் என்று கருதும் பதிவுகளை மத்திய மற்றும் மாநில சட்டம் ஒழுங்கு விசாரணை அமைப்புகள், தேர்தல் ஆணையத்திடம் கோரியிருக்கின்றன. மேலும், தேர்தல் நாளுக்கு முன்பு தமிழகம் வந்து, ஏப். 23ஆம் தேதியிலிருந்து ஒரு சில நாள்களுக்குப் பின் வெளிநாடு சென்றவர்களின் விவரங்களையும் இந்திய குடியுரிமைத் துறையிடம் கோரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தேர்தலில் வாக்களித்த 40 வெளிநாட்டினர் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கும் விசாரணை அமைப்பு, இதுபோல தேர்தலுக்கு முன்பு வந்து, வாக்களித்துவிட்டு தேர்தல் முடிந்ததும் உடனடியாக வெளிநாடு திரும்பியவர்கள் யாரேனும் இருக்கலாம் என்பதால், அவர்களையும் கண்டுபிடிக்க, விசாரணை அமைப்புகள் தீவிரம்காட்டி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.