FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

33 வெளிநாட்டினர் உள்பட 8,796 பக்தர்கள் அடங்கிய 9-வது குழு அமர்நாத் புறப்பட்டது!

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நடைபெறும் வருடாந்திர அமர்நாத் யாத்திரை பற்றி..

Updated On : 10 ஜூலை 2026, 12:38 pm IST
பகிர்:

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நடைபெறும் வருடாந்திர அமர்நாத் யாத்திரைக்காக 33 வெளிநாட்டினர் உள்பட 8,796 பக்தர்களைக் கொண்ட ஒன்பதாவது குழு பகவதி நகர் முகாமிலிருந்து புறப்பட்டனர்.

ஜூலை 2 ஆம் தேதி யாத்திரை தொடங்கியதிலிருந்து 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை இதுவரை 1.73 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

வெள்ளிக்கிழமையான இன்று ஒன்பதாவது குழுவில் 6,046 ஆண்கள், 2,042 பெண்கள், 228 சாத்விக்கள், 10 குழந்தைகள், ஒரு திருநங்கை மற்றும் 33 வெளிநாட்டினர் உள்பட மொத்தம் 8,796 பக்தர்கள் 354 வாகனங்களில் புறப்பட்டனர்.

Advertisement

Advertisement

அதிகாரிகளின் தகவலின்படி, வாகன அணிவகுப்பு இரண்டு தனித்தனி குழுக்களாகப் புறப்பட்டது. பால்டால் வழித்தடத்தில் 3,450 பக்தர்களுடன் அதிகாலை 3.35 மணிக்கும், பஹல்காம் வழித்தடத்தில் 5,346 பக்தர்களுடன் மற்றொரு குழு அதிகாலை 4 மணிக்கும் பம் பம் போலே, ஹர ஹர மகாதேவ் மற்றும் பர்ஃபானி பாபா கி ஜெய் ஆகிய முழக்கங்களுக்கு மத்தியில் புறப்பட்டன.

இன்று புறப்பட்டவர்களையும் சேர்த்து, மொத்தம் தொடங்கியதிலிருந்து இதுவரை ஜம்மு முகாமிலிருந்து 61,612 பக்தர்கள் சென்றுள்ளனர்.

57 நாள்கள் நடைபெறும் இந்த அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 28-ஆம் தேதியுடன் நிறைவடைகின்றது.

A ninth batch of 8,796 pilgrims, including 33 foreigners, left the Bhagwati Nagar base camp here on Wednesday for the annual Amarnath Yatra in Jammu and Kashmir's Anantnag district amid multi-tier security, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments