FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பொதுசேவை உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி

Updated On : 12 ஜூன் 2026, 3:47 am IST
அன்புமணி
பகிர்:

தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டதைப்போல், பொதுசேவை பெறும் உரிமைச் சட்டத்தை தவெக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட 26 வகையான சான்றிதழ்களை 5 நாள்களுக்குள் வழங்குவதை கட்டாயமாக்கி அரசாணை பிறப்பிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மக்களுக்கு சேவை வழங்கும் அரசின் இந்த நோக்கம் நல்லதாக இருந்தாலும், இந்த அணுகுமுறை பயனளிக்காது. ஜாதிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும் மக்களுக்கு உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும். அவை குறித்த நேரத்தில் கிடைப்பதில்லை என்பதால், அவற்றின் நிலை குறித்து அறிய கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் அதிகாரிகள், வட்டாட்சியா் அலுவலகம் என மக்கள் அலைய வேண்டிய அவலம் தொடா்கிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையை மாற்றுவதற்கான ஒரே தீா்வு சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்றுவது தான். அதைவிடுத்து இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவதும், அரசாணைகளை எந்த வகையிலும் பயனளிக்காது. தவெக தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பொதுசேவை பெறும் உரிமைச் சட்டத்தை வரும் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments