திமுக கூட்டணியில் சிபிஐ விலகல்! யார் இல்லாவிட்டாலும் கவலையில்லை: ஆர்.எஸ். பாரதி
திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லாவிட்டாலும் கவலையில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லாவிட்டாலும் கவலையில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியதாவது, "இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 1971-ல் எங்களுடன் இருந்தனர்; பின்பு சென்று விட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் 1978-ல் இருந்தனர்; பின்னர், சென்று விட்டனர்.
இவர்கள் இப்படி பலமுறை எங்களுடன் இருந்தார்கள், போனார்கள். அதேபோல இன்று பிரிந்து செல்கின்றனர்.
Advertisement
Advertisement
இப்போதைக்கு திமுக கூட்டணியில் நீடிக்கவில்லை என மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். எப்போதைக்கும் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. திமுகவை பொருத்தவரையில் - வந்தால் அவர்களோடு; வராவிட்டால் அவர்களில்லாமல்.
அவர்கள் எதிர்த்தால், அவர்களையும் எதிர்த்து திமுகவின் பயணத்தை தொடரும் என்பதுதான் வரலாறு. அவர்களுக்கு இந்த ஒருநாளில் ஏற்பட்ட சங்கடத்தை நீங்கள்தான் கேட்டறிய வேண்டும்.
யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் கவலைப்படுவதேயில்லை" என்று தெரிவித்தார்.