இயக்குநர் பாரதிராஜா மறைவு: இறுதி ஊர்வலம் தொடங்கியது!
இயக்குநர் பாரதிராஜாவின் இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். மக்களின் கண்ணீர் கடலில் அவரது இறுதி ஊர்வலம் அல்லிநகரத்தில் தொடங்கியது.
பாரதிராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம், அல்லி நகரத்தில் உள்ள பண்ணை வீட்டில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு ஊர்வலமாக பண்ணைத் தோட்டத்துக்குக் கொண்டு வரப்படுகிறது.
நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், திரைப்பட கலைஞர்கள், ஊர் மக்கள், உறவினர்கள் என பலரும் இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்தில் குழுமியிருக்கிறார்கள்.
Advertisement
Advertisement
இயக்குநர் பாரதிராஜா இறுதிச் சடங்குக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார்.
இதையடுத்து 72 குண்டுகள் முழங்க பாரதிராஜாவுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறவிருக்கின்றன. இதற்காக தயார் நிலையில் காவலர்கள் அணிவகுத்து நிற்கின்றனர்.