காவேரிப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதிய விபத்து: 3 பேர் பலி
காவேரிப்பாக்கம் அருகே புதிய மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தின் மீது சொகுசு கார் மோதியதில் 3 பேர் பலியானது குறித்து...
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே புதிய மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக வந்த சொகுசு கார் மோதிய விபத்தில் 2 குழந்தைகள், 1 முதியவர் என மூன்று பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரியில் இருந்து வேலு (60) என்பவர் தனது 3 பேரப்பிள்ளைகளையும் வெள்ளிக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் வேலு, அவரது பேரப்பிள்ளைகளான குண ஸ்ரீ (7), அஸ்வந்த்(5) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் அஜய் (9) என்ற சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.