அவிநாசி அருகே கௌசிகா நதியில் கழிவுகளை கொட்ட வந்த லாரி சிறைப்பிடிப்பு
அவிநாசி அருகே தெக்கலூரில் கௌசிகா நதியில் கழிவுகளை கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்தது குறித்து...
அவிநாசி: அவிநாசி அருகே தெக்கலூரில் கௌசிகா நதியில் கழிவுகளை கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் சனிக்கிழமை சிறைப்பிடித்தனர்.
அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் நொய்யல் ஆற்றின் துணை நதியான கௌசிகா நதி தெக்கலூர், கணியாம்பூண்டி, புதுப்பாளையம், உப்பிலிபாளையம் ஆகிய 4 ஊராட்சிகளை கடந்து செல்கிறது. அந்த பகுதியில் ஏராளமானோர் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
இதற்கிடைடே, தெக்கலூர் கௌசிகா நதியில் தொடர்ந்து கழிவுகளை கூட்டி வருவதாக சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தெக்கலூர் ஏரிபாளையத்தில் உள்ள கௌசிகா நதி பகுதியில் கொட்டுவற்காக கேரளத்தில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகளை லாரியில் ஏற்றிக் கொண்டு சனிக்கிழமை காலை வந்தனர்.
இதை அறிந்த அந்த பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் அந்த லாரியை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Regarding the public detaining a lorry that had come to dump waste into the Kousika River at Thekkalur, near Avinashi...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.