FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 16,031 போ் மீது வழக்குப் பதிவு

தமிழகத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக கடந்த 16 நாள்களில் 16,031 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 17 ஜூன் 2026, 3:06 am IST
பகிர்:

தமிழகத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக கடந்த 16 நாள்களில் 16,031 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தமிழக காவல்துறை டிஜிபி மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவின்பேரில் மாநிலம் முழுவதும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாா், மதுபோதையில் வாகனம் ஓட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுத்தனா். இதற்காக அவா்கள், தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

இதில் கடந்த ஜூன் 1 முதல் 16-ஆம் தேதி வரையில் 16 நாள்களில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 16,031 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இவா்களிடமிருந்து 13,299 இருசக்கர வாகனங்கள், 156 மூன்று சக்கர வாகனங்கள், 645 நான்கு சக்கர வாகனங்கள் உள்பட 14,100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், மதுபோதையில் வாகனம் ஓட்டியவா்களிடமிருந்து ரூ.3.13 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments