சென்னை பரந்தூரில் 2வது விமான நிலையம்? முக்கிய அறிவிப்பை வௌயிட்ட அமைச்சர் நிர்மல்குமார்
சென்னைக்கு 2வது விமான நிலையம் உண்டு ஆனால் அது பரந்தூரில் அல்ல என அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும், ஆனால், அது பரந்தூரில் அமையாது என்று எரிசக்தி வளம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் ஆளுநரின் உரைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், பரந்தூரில் அமையவுள்ள விமான நிலையத் திட்டத்தை எதிர்ப்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், மாற்று இடத்தைத் பரிசீலிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமையக் கூடாது என்று போராடி வரும் கிராம மக்களுக்கு இது மிகப்பெரிய நிம்மதியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
Advertisement
Advertisement
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமையாது என்று அமைச்சர் ஆர். நிர்மல்குமார் தெளிவுபடுத்தியிருக்கிறார். அத்துடன், 2வது விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடம் குறித்து ஆராயப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்றது முதலே, பரந்தூரில் விமான நிலையம் அமையுமா என்று கேள்விகள் எழுந்த நிலையில், அமைச்சர் ஒருவர் இது குறித்து அதிகாரப்பூர்வமாக பேசியிருப்பது இதுவே முதல் முறை.