திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவால் 7 பேர் உயிரிழந்த நிலையில் ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து...
திருவள்ளூரில் அம்மோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் குமார் இன்று (ஜூன் 21) தெரிவித்தார்.
மருத்துவமனையில் செய்தியாளர்களுடன் அமைச்சர் பர்வேஸ் குமார் பேசியதாவது:
அம்மோனியா வாயு கசிவால் துயரமான சம்பவம் நடந்துள்ளது.சம்பவம் தொடர்பாக 10 நிமிடங்களுக்கு ஒருமுறை முதல்வருக்கு தகவல் தெரிவித்து வருகிறோம்.
Advertisement
Advertisement
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. விரிவான விசாரணை நடத்தப்படும். உயிரிழந்தவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிட்டார்.
summary