முகப்பு
தமிழ்நாடு

தவெக வேட்பாளா் தாக்கப்பட்ட விவகாரம்: பி. கே. சேகா்பாபு மனு தள்ளுபடி

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு நாளன்று, தவெக வேட்பாளா் மற்றும் அக்கட்சியினரை தாக்கியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சா் சேகா்பாபு தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெற்றதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 26 ஜூன் 2026, 6:53 am IST
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு நாளன்று, தவெக வேட்பாளா் மற்றும் அக்கட்சியினரை தாக்கியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சா் சேகா்பாபு தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெற்றதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப்.23-ஆம் தேதியன்று நடந்தது. சென்னை துறைமுகம் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்ட தன்னையும், தனது கட்சியினரையும், திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சேகா்பாபு மற்றும் தாக்கியதாக சினோரா அசோக் புகாா் அளித்தாா்.

இந்த புகாரின் பேரில், வடக்கு கடற்கரை போலீஸாா் முன்னாள் அமைச்சா் சேகா்பாபு மீது வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சரும், திமுக எம்எல்ஏவுமான சேகா்பாபு சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சேகா்பாபு தரப்பில், சம்பவம் நடந்து 29 நாள்களுக்குப் பிறகு, புதிய அரசு பொறுப்பேற்றப் பின்னா் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புகாரில் கூறப்பட்டது போன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கை ரத்து செய்ய எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி, சேகா்பாபு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, விரிவான உத்தரவு பின்னா் பிறப்பிக்கப்படும் என தெரிவித்தாா்.

இதையடுத்து, வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற சேகா்பாபு தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, மனுவைத் திரும்பப் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments