10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள்!
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், மனநல ஆலோசனைக்கு உள்ள உதவி எண்கள் குறித்து...
தமிழகத்தில் பத்தாம் ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், மனநல ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் ”நட்புடன் உங்களோடு” திட்டம் மூலம் அதில் உள்ள உதவி எண்களைப் பயன்படுத்துமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்த அரசு அறிவிப்பில் தெரிவித்ததாவது:
10- வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 20) வெளியிடப்படுகிறது.
Advertisement
Advertisement
மாணவர்களின் மன உறுதி மற்றும் மனநலம் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் "நட்புடன் உங்களோடு" திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, மனநல ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தயங்காமல் 14416 அல்லது 104 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகளை தவறாமல் பெற்றுக் கொள்ளலாம். பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள். மருத்துவர்கள் மூலம் கட்டணமின்றி இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.