விவசாயம் செழிக்க 650 கிடா வெட்டி கறி விருந்து!
குருங்குளத்தில் நடைபெற்ற கிடா விருந்து தொடர்பாக..
தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளத்தில் முத்துமாரியம்மன் மற்றும் அய்யனார் கோயில் கிடாவெட்டு திருவிழா கடந்த 26 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமரிசையாக நடைபெற்றது.
வீட்டுக்கு வீடு பத்திரிகை அடித்து உறவினர்கள், நண்பர்களை அழைத்து கிராமம் முழுவதும் 650 கிடா வெட்டி கறிக்குழம்பு, கறி வறுவல், மீன் குழம்பு, மீன் வறுவல் என அசைவ விருந்து பரிமாறப்பட்டது.
ஒவ்வொரு வீட்டு வாசல் முன்பும் பந்தல் அமைத்து இந்தக் கறி விருந்து விழா விமரிசையாக நடைபெற்றது.
Advertisement
Advertisement
26 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த விழாவானது இன்று(மே 20) முதல் 7 நாள்கள் 7 கிராமங்களில் நடைபெறுகிறது.
நல்ல மழை பெய்து, விவசாயம் செழிக்க, முன்னோர்கள் காலத்தில் இருந்து, இந்தக் கறி விருந்து நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
summary