தில்லியில் காங்கிரஸ் தலைவர்களைச் சந்திக்கிறாரா முதல்வர் விஜய்?!
தமிழக முதல்வர் விஜய் தில்லியில் இன்று காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக முதல்வர் விஜய் தில்லியில் இன்று காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கவுள்ளார்.
தமிழக முதல்வராகப் பதவியேற்ற பின் முதல்முறையாக இருநாள்கள் அரசுமுறைப் பயணமாக விஜய் தில்லி சென்றுள்ளார்.
தில்லி விமான நிலையத்தில் நேற்று (மே 27) அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்துக்குச் சென்ற விஜய்க்கு, தில்லி திகார் சிறையில் பாதுகாப்புப் பணியில் உள்ள தமிழ்நாடு காவல் துறை சிறப்புப் படையணி சார்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் பிரதமா் மோடியை முதல்வர் விஜய் நேற்று மாலை சந்தித்துப் பேசினார். அப்போது, மேக்கேதாட்டு அணை விவகாரம், சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம் உள்ளிட்டவை குறித்தும், தமிழகத்துக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு குறித்தும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்றக் குழு தலைவருமான சோனியா காந்தி, மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை விஜய் சந்தித்து பேசவுள்ளாளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சியே முதலில் ஆதரவு தெரிவித்த நிலையில் அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. ராகுல் காந்தியுடன் விஜய் நீண்டகாலமாக நல்ல நட்புடன் இருந்துவரும் நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பிற்குப் பின், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் முன்னெடுப்பால் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையை முதல்வர் விஜய் திறக்கவுள்ளார்.