இரவு 10 மணி வரை 24 மாவட்டங்களில் மழை!
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு (இரவு 10 மணி வரை ) ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், பெரம்பலூர், கரூர், சேலம், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், தருமபுரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
Weather update Rain in 24 districts until 10 PM!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.