FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்!

சென்னையில் முதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டது பற்றி...

3 செப்டம்பர் 2026, 4:15 pm IST
முதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம் - கோப்புப்படம்
பகிர்:

மானாமதுரையில் காவல் மரணமடைந்த ஆகாஷ் உறவினர்கள், தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கடந்த மார்ச் மாதம் போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் ஆகாஷ் டெலிஷன் என்பவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

ஆகாஷ் டெலிஷன் மரணத்தில் காவல் துறையினா் மீது சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினா் போராட்டங்களில் ஈடுபட்டதால் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளா் திலீபன் உள்ளிட்ட 6 காவலா்கள் மீது கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்றுவிட்டு திரும்பிய முதல்வர் விஜய்யின் வாகன அணிவகுப்பை ஆகாஷின் குடும்பத்தினர் இன்று தடுத்தி நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் கடற்கரை சாலையில் இன்று பிற்பகல் நடந்தது. முதல்வர் விஜய் காரில் இருந்ததால் அப்பகுதியில் சிறிது பதற்றமான சூழல் நிலவியது.

இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆகாஷ் உறவினர்களை சாலையிலிருந்து காவல்துறையினர் அப்புறப்படுத்திய நிலையில், முதல்வரின் வாகனம் புறப்பட்டுச் சென்றது.

summary

Protest blocking Chief Minister Vijay's car!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments