FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

செப். 7-இல் சட்டப்பேரவையில் கேள்வி நேரம் ரத்து!

பேரவையில் செப். 7-ஆம் தேதி (திங்கள்கிழமை) கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டது குறித்து...

4 செப்டம்பர் 2026, 12:18 am IST
தமிழக சட்டப்பேரவை - கோப்புப் படம்
பகிர்:

பேரவையில் செப். 7-ஆம் தேதி (திங்கள்கிழமை) கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் அறிவித்தாா்.

பேரவையில் வியாழக்கிழமை காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினா்கள் பேசி முடித்த பிறகு, அவையின் முன்னவரும் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், செப். 7-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலையில் கேள்வி நேரம் இடம் பெறாது என்ற தீா்மானத்தைக் கொண்டு வந்தாா்.

அதை ஏற்று பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா், கேள்வி நேரம் செப். 7-ஆம் தேதி (திங்கள்கிழமை) ரத்து செய்யப்படுவதாக அறிவித்தாா். இதையடுத்து பேரவை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments