FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும்: கனிமொழி எம்.பி.

பாபநாசம் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக்கோரி கனிமொழி எம்.பி. வலியுறுத்திருப்பது குறித்து...

19 வினாடிகள் முன்பு
திமுக எம்.பி. கனிமொழி - கோப்புப் படம்
பகிர்:

பாபநாசம் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தவெக அரசை திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறக்கக்கோரி, கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, பாபநாசம் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி, நியாயமான உரிமைக்காகப் போராடிய தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளை அராஜகமாகக் கைது செய்துள்ள தவெக அரசின் கொடுங்கோன்மை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தை சார்ந்துள்ள சுமார் 5,000 ஏக்கர் வாழைப் பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. பலமுறை மனு அளித்தும், தொடர் போராட்டங்கள் நடத்தியும் மாவட்ட நிர்வாகமும் நீர்வளத்துறையும் நடவடிக்கை எடுக்காமல், விவசாயிகளை சாலையில் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ளது, இந்த அரசு.

Advertisement

Advertisement

விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக ஏற்று, பாபநாசம் அணையிலிருந்து 1,500 கன அடி தண்ணீரை திறந்துவிட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

summary

DMK MP Kanimozhi urges the release of water from Papanasam Dam for irrigation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments