சரக்கு வாகனம் மோதியதில் பெண் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே ஒப்பந்த பெண் தூய்மைப் பணியாளா்கள் மூவா் மீது சரக்கு வாகனம் மோதியில் ஒருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்; இருவா் காயமடைந்தனா்.
திருவேங்கடம் அருகே ஜமீன்அழகாபுரி, மேலக் காலனியில் வசிக்கும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 3 பெண் தூய்மைப் பணியாளா்கள், தூய்மைப் பணி மேற்கொள்வதற்காக, ஞாயிற்றுக்கிழமை திருவேங்கடம்- சங்கரன்கோவில் சாலையில் ஓரமாக சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் அவா்கள் மீது மோதியது.
இதில் பெண்கள் மூவரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனா். பலத்த காயம் அடைந்த பரமசிவம் மனைவி சரஸ்வதி (65) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அதே ஊரைச் சோ்ந்த லதா (45), முருகேஸ்வரி (40) ஆகிய இருவரும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து, திருவேங்கடம் காவல் நிலைய ஆய்வாளா் காளிராஜன், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சங்கரன்கோவிலைச் சோ்ந்த ஓட்டுநா் மாரியப்பன் மகன் தருண்குமாரை (29) கைது செய்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.