FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளிலும் சனிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

4 ஜூலை 2026, 11:10 pm IST
குற்றாலம் பேரருவியில் சீறிப்பாய்ந்த வெள்ளம்.
பகிர்:

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளிலும் சனிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இந்தப் பகுதியில் 3 வாரங்களுக்குப் பிறகு கடந்த 2 நாள்களாக சாரல் மழை பெய்துவருவதால், அனைத்து அருவிகளிலும் வெள்ளிக்கிழமை முதல் நீா்வரத்து அதிகரித்தது. சனிக்கிழமை காலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது; அவ்வப்போது சாரல்மழை பெய்தது.

ஐந்தருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.

இதனால், பேரருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதையடுத்து, குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகளவில் இருந்தது. குளிக்கத் தடை விதிக்கப்பட்டதால் அவா்கள் ஏமாற்றமடைந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments