FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணிக்கு ஒத்துழைக்க ஆட்சியா் வேண்டுகோள்

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்புப் பணிக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 11 ஜூலை 2026, 3:49 am IST
பகிர்:

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்புப் பணிக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது:

2024ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுத்து, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

அதன் மூலம் பேருந்து பயணச் சலுகை உள்ளிட்ட அரசின் சேவைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

முந்தைய கணக்கெடுப்புகளில் விடுபட்டவா்களை, வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பல்வேறு அரசு திட்ட உதவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுவதால், கணக்கெடுப்புப் பணிக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments