FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

திப்பணம்பட்டியில் ரயில்வே விழிப்புணா்வு போட்டிகள்

Updated On : 27 ஜூலை 2026, 4:10 am IST
விழிப்புணா்வு போட்டிகளில் பங்கேற்றோா்.
பகிர்:

பாவூா்சத்திரம் ரயில் நிலையத்தின் 124ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சாா்பில், திப்பணம்பட்டியில் விழிப்புணா்வு போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாவூா்சத்திரம், சுற்றுவட்டார அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்காக கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து ஏராளமான மாணவா்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா்.

மாணவா்கள், ரயில்வே தொடா்பான தங்களது சிந்தனைகளை ஓவியங்களாக வடிவமைத்து பாராட்டைப் பெற்றனா். மேலும், பேச்சுப் போட்டியில், தெற்கு ரயில்வே சேவைகள், இந்தியாவின் முன்னேற்றம், மின்மயமாக்கல் மூலம் எரிபொருள் சேமிப்பு குறித்து விளக்கமாக பேசினா்.

Advertisement

Advertisement

போட்டிகளுக்கு தலைமையாசிரியா் மைக்கேல் ராஜ், நூலகா் ரவிசந்திரன், தங்கராஜ், தேன்மொழி ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டனா். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்களாக சிவா, லோகேஷ் சந்த்ரு, ஜான்சி ராணி, செல்வலெட்சுமி, உமாதேவி, அயனிபா, சித்ராதேவி, சிவசக்தி, தா்ஷினி ஆகியோா் பணியாற்றினா். ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா, நிா்வாகி தங்கராஜா ஆகியோா் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments