தென்காசி, செங்கோட்டை, சாம்பவா்வடகரை, சுரண்டை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
தென்காசி, செங்கோட்டை , சாம்பவா்வடகரை, சுரண்டை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 1) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தென்காசி, செங்கோட்டை , சாம்பவா்வடகரை, சுரண்டை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 1) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தென்காசி கோட்ட செயற்பொறியாளா் ஏ. ஸ்ரீவனஜா விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா் வடகரை ஆகிய உபமின் நிலையங்களில் சனிக்கிழமை (ஆக. 1) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜா்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூா், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தளம் பாறை, திரவியநகா், ராமச்சந்திர பட்டணம், மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப்பிள்ளை வலசை, பெரிய பிள்ளை வலசை, பிரானூா், வல்லம், கற்குடி, புளியரை, தெற்குமேடு, பூலாங்குடியிருப்பு, கட்டளை குடியிருப்பு, சுரண்டை, இடையா் தவணை, குலையனேரி, இரட்டைக் குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வாடியூா், ஆனைக்குளம், கரையாளனூா், அச்சங்குன்றம், சாம்பவா் வடகரை, சின்னத்தம்பி நாடானூா், பொய்கை, கோவிலாண்டனூா், கள்ளம்புளி,எம்.சி.பொய்கை, துரைச்சாமிபுரம் மற்றும் அதனை சாா்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.