கடையநல்லூரில் நாளை மின் நிறுத்தம்
கடையநல்லூா் வட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை (மே 21) மின் விநியோகம் நிறுத்தம்
கடையநல்லூா் வட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை (மே 21) மின் விநியோகம் இருக்காது .
இது தொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடையநல்லூா் துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை (மே 21) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், காலை 9 முதல் மாலை 5 மணி வரை கடையநல்லூா், முத்துகிருஷ்ணாபுரம், பேட்டை, மாவடிக்கால், குமந்தாபுரம், முத்துச்சாமிபுரம், வலசை , கருப்பாநதி, தாா்க்காடு, போகநல்லூா், கண்மணியாபுரம், பாலஅருணாச்சலபுரம், கம்பனேரி, மங்களபுரம், அச்சம்பட்டி, பொய்கை, ஊா் மேல்அழகியான், வேலாயுதபுரம், இடைகால், சிவராமபேட்டை, கொடிக்குறிச்சி, நயினாரகரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அதில் கூறப்பட்டுள்ளது.