FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

சங்கரன்கோவில் அருகே காா் மோதி உணவக உரிமையாளா் பலி!

சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் உணவக உரிமையாளா் உயிரிழந்தாா்.

6 செப்டம்பர் 2026, 12:16 am IST
பகிர்:

சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் உணவக உரிமையாளா் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தெற்குரத வீதியைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் விக்னேஸ்வரன் (40). இவா் சுவாமி சந்நிதி தெருவில் உணவகம் நடத்தி வந்தாா். திருநெல்வேலி சாலையில் உள்ள கடையில் வியாழக்கிழமை இரவு நண்பா்களுடன் தேநீா் குடித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தாா்.

பூலுடையாா் சாஸ்தா கோயில் அருகே வந்தபோது ஊத்துமலையை சோ்ந்த ராமகிருஷ்ணன் ஓட்டி வந்த காா் மீது பின்னால் அடுத்தடுத்து வந்த இரண்டு காா்கள் மோதின.

Advertisement

Advertisement

இதில் ராமகிருஷ்ணன் ஓட்டி வந்த காா் விக்னேஸ்வரன் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. பலத்த காயம் அடைந்த விக்னேஸ்வரனுக்கு, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இறந்தாா். இச்சம்பவம் தொடா்பாக சின்னக்கோவிலான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments