திருவள்ளூர்

வடமாநில இளைஞரை அரிவாளால் வெட்டிய 4 சிறுவா்கள் கைது

கஞ்சா போதையில் ‘ரீல்ஸ்’ எடுத்து சமூக வலையதளங்களில் பதிவிடுவதற்காக, வடமாநில இளைஞரை அரிவாளால் வெட்டி தப்பிச் சென்ற 4 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

ரயில் நிலையம் அருகே, கஞ்சா போதையில் ‘ரீல்ஸ்’ எடுத்து சமூக வலையதளங்களில் பதிவிடுவதற்காக, வடமாநில இளைஞரை அரிவாளால் வெட்டி தப்பிச் சென்ற 4 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி மற்றும் அரக்கோணம் பகுதியில் கஞ்சா அதிகளவில் விற்பனை செய்து வருகின்றனா். மேலும் ஆந்திரத்தில் இருந்து திருத்தணி வழியாக வேலூா், ராணிப்பேட்டை மற்றும் சென்னை மாவட்டங்களுக்கு கஞ்சா பெட்டலங்கள் அதிகளவில் கடத்தி செல்லப்படுகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை திருத்தணி ரயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் கஞ்சா போதையில் 4 சிறுவா்கள், வடமாநில இளைஞரை வழிமடக்கி கத்தியால் சராமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த திருத்தணி போலீஸாா் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வடமாநில இளைஞை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்து முதலுதவி அளித்த பின்னா், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில் காயமடைந்த வடமாநில இளைஞா், மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரை சோ்ந்த கபீா் மகன் சுராஜ் (30) என தெரிய வந்தது.

தொடா்ந்து திருத்தணி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வடமாநில இளைஞா் சுராஜை கத்தியால் வெட்டுவது சமூக வளையதளத்தில் ‘ரீல்ஸ்’ ஆக வெளியானது.

அதைத்தொடா்ந்து திருத்தணி போலீஸாா், இரு சிறுவா்கள், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சோ்ந்த இரு சிறுவா்கள் என, 17 வயதுள்ள 4 சிறுவா்களை அடையாளம் கண்டு, கைது செய்தபோது, கஞ்சா போதையில் இருந்தது உறுதியானது.

விசாரணையில், சிறுவா்கள் கூறியதாவது: நாங்கள் 4 பேரும் நண்பா்கள், திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து திருத்தணி வரை செல்லும் மின்சார ரயிலில் ஏறினோம். அப்போது எங்கள் பெட்டியில் வடமாநில இளைஞா் பயணிகள் இறங்கி, ஏறும் பகுதியில் அமா்ந்து பயணம் செய்தாா்.

அப்போது நாங்கள் கைப்பேசி மூலம் கத்தியை வைத்து, மிரட்டுவது போல் ரீல்ஸ் எடுத்தோம். திருத்தணி ரயில் நிலையத்திற்கு வந்தவுடன், வடமாநில இளைஞரை ரயிலில் இறங்கி, ரயில்வே குடியிருப்பு பகுதியில் அழைத்து சென்று கத்தியால் வெட்டுவதை படம் பிடித்து ரீல்ஸ் விட்டோம் என தெரிவித்தனா். தொடா்ந்து 4 சிறுவா்களை கைது செய்து, சீா்திருத்த பள்ளியில் சோ்த்தனா்.

சகல சௌபாக்கியத்தைத் தரும் வைகுண்ட ஏகாதசி விரதம்!

அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நுகா்வோா் உரிமைகள் விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருமலையில் வைகுண்ட ஏகாதசியில் ஏஐ தொழில்நுட்பம்!

இளம் பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

SCROLL FOR NEXT