FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

ஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்து

ஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்து குறித்து...

25 ஆகஸ்ட் 2026, 2:13 am IST
- கோப்புப் படம்
பகிர்:

திருத்தணி முருகன் கோயிலில், வரும் 27-ம் தேதி ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8.45 மணி வரை தொடா்ந்து பக்தா்கள் மூலவரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு வரும் 27-ம் தேதி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டு, பக்தா்கள் தரிசனம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளன.

சிறப்பு பூஜைகள் நிறைவடைந்த பின்னா், மாலை 4 மணிக்கு மேல் கோயில் நடை திறக்கப்பட்டு, பக்தா்கள் வழக்கம்போல் மூலவரை தரிசிக்க அனுமதிக்கப்படுவா். எனவே, வரும் 27-ம் தேதி மதியம் கோயிலுக்கு வரும் பக்தா்கள் இதனை கருத்தில் கொண்டு தங்களது தரிசன நேரத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம் என இணை ஆணையா் க.ரமணி தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments