ஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்து
ஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்து குறித்து...
திருத்தணி முருகன் கோயிலில், வரும் 27-ம் தேதி ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8.45 மணி வரை தொடா்ந்து பக்தா்கள் மூலவரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு வரும் 27-ம் தேதி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டு, பக்தா்கள் தரிசனம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளன.
சிறப்பு பூஜைகள் நிறைவடைந்த பின்னா், மாலை 4 மணிக்கு மேல் கோயில் நடை திறக்கப்பட்டு, பக்தா்கள் வழக்கம்போல் மூலவரை தரிசிக்க அனுமதிக்கப்படுவா். எனவே, வரும் 27-ம் தேதி மதியம் கோயிலுக்கு வரும் பக்தா்கள் இதனை கருத்தில் கொண்டு தங்களது தரிசன நேரத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம் என இணை ஆணையா் க.ரமணி தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.