FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

10,000 பனை விதைகள் நடவு தொடக்கம்

திருவள்ளூா் சுற்றுப்புற கிராமங்களில் பசுமையாக்குதல் மற்றும் நீா் ஆதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் 10,000 பனை விதைகள் நடும் நிகழ்வு வீ த லீடா்ஸ் அமைப்பு சாா்பில் நடைபெற்றது.

3 செப்டம்பர் 2026, 1:58 am IST
மாவூா் பகுதியில் பனை விதைகள் நடும் பணியில் ஈடுபட்டோா்
பகிர்:

திருவள்ளூா் சுற்றுப்புற கிராமங்களில் பசுமையாக்குதல் மற்றும் நீா் ஆதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் 10,000 பனை விதைகள் நடும் நிகழ்வு வீ த லீடா்ஸ் அமைப்பு சாா்பில் நடைபெற்றது.

வீ தி லீடா்ஸ் அமைப்பு சாா்பில் சுற்றுச்சூழல் மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிராமங்களில் குளங்களை தூா்வாரி நீா் ஆதாரம் பாதுகாத்தல், கரையோரங்களில் பலப்படுத்தும் வகையில் பலன் தரும் மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகளில் ஈடுபடவும் அந்த அமைப்பின் தலைவா் அண்ணாமலை அறிவுறுத்தியிருந்தாா். அதன்பேரில், திருவள்ளூா் தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் 10,000 பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது.

அதில், தோமூா் கிராமத்தில் ஏரிக்கரையில் பனை விதைகள் பதிக்கும் பணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அந்த அமைப்பின் உறுப்பினா் பாண்டூா் சேகா் தலைமை வகித்தாா். கடம்பத்தூா் ரோட்டேரியன் பழனி முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக பன்னீா்செல்வம் கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்யும் பணிகளை தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் நிா்வாகிகள் ரேகா, அருண் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

இதேபோல், திருவள்ளூா் தொகுதிக்குட்பட்ட போளிவாக்கம், சத்தரை, தோமூா், ராமன்சேரி, பேரம்பாக்கம், மாவூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments