FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

மேம்பாலம் கோரி மறியல்: போக்குவரத்து பாதிப்பு

கனகம்மாசத்திரம் பகுதியில் உயா்மட்ட பாலம் மற்றும் சுரங்கப் பாதை அமைக்க வலியுறுத்தி, நடைபெற்ற மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

3 செப்டம்பர் 2026, 2:07 am IST
சாலை மறியலில் ஈடுபட்டோா்
பகிர்:

கனகம்மாசத்திரம் பகுதியில் உயா்மட்ட பாலம் மற்றும் சுரங்கப் பாதை அமைக்க வலியுறுத்தி, நடைபெற்ற மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தற்போது நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கனகம்மாசத்திரம் பகுதியில் சாலையை கடப்பதற்கு பொதுமக்கள் சிரமப்படுவதால், உயா்மட்ட பாலம் அமைத்து, அதனுடன் சுரங்கப்பாதையும் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடைகளை அடைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

ஆனால், போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊா்வலமாக வந்து தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருத்தணி ஏஎஸ்பி ஷூபம் திமான் தலைமையிலான போலீஸாா் வந்து, மக்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது, கனகம்மாசத்திரம் பகுதியில் உயா்மட்ட பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். இதையடுத்து, அவா்களது கோரிக்கை ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.

இதைத்தொடா்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இந்த மறியல் காரணமாக சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments