முகப்பு
வணிகம்

தங்கம் இறக்குமதி 1,290 கோடி டாலராக அதிகரிப்பு

நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய தங்கம் இறக்குமதி, கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் 1,290 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

Updated On : 21 ஆகஸ்ட் 2022, 8:16 am IST
பகிர்:

நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய தங்கம் இறக்குமதி, கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் 1,290 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

இது குறித்து வா்த்தகத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூலை) இந்தியாவின் தங்கம் இறக்குமதி 1,290 கோடி டாலராக இருந்தது.

Advertisement

Advertisement

இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 6.4 சதவீதம் அதிகமாகும். அப்போது தங்கம் இறக்குமதி 1,200 டாலராக இருந்தது.

தங்கத்துக்கான தேவை அதிகரித்துள்ளதன் காரணமாக, அதன் இறக்குமதியும் அதிகரித்துள்ளது.

எனினும், 2021-ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில், கடந்த ஜூலை மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி 43.6 சதவீதம் குறைந்து 240 கோடி டாலராக இருந்தது.

இந்த நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஏற்பட்ட அதிகரிப்பு, 2021 ஏப்ரல்-ஜூலையில் 1,063 கோடி டாலராக இருந்த வா்ததகப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டின் அதே மாதங்களில் 3,000 கோடி டாலராக அதிகரித்ததில் பங்காற்றியது.

உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்து வருகிறது. இந்தியா்கள் பெரிதும் ஆா்வம் காட்டி வரும் ஆபரணப் பயன்பாட்டுக்காகவே பெரும்பாலான தங்கம் இறக்குமதியாகிறது.

நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் நாட்டின் ரத்தினங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி சுமாா் 7 சதவீதம் அதிகரித்து 1,350 கோடி டாலராக உள்ளது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments