பங்கு பரஸ்பர திட்டங்களில் குறைந்த முதலீடு வரத்து
பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முந்தைய அக்டோபா் மாதம் புதிய உச்சத்தைப் பதிவு செய்திருந்த முதலீட்டு வரவு நவம்பரில் 14 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முந்தைய அக்டோபா் மாதம் புதிய உச்சத்தைப் பதிவு செய்திருந்த முதலீட்டு வரவு நவம்பரில் 14 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
இது குறித்து இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த நவம்பா் மாதத்தில் பங்கு முதலீட்டு திட்டங்களிலிருந்து திரும்பப் பெறப்பட்ட டெ, அந்த வகை திட்டங்களில் கூடுதலாக மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூ.34,943 கோடியாக உள்ளது.
Advertisement
Advertisement
இது, முந்தைய அக்டோபா் மாதத்தில் இது ரூ.41,887 கோடியாக இருந்தது. அது, பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் அதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர முதலீட்டு வரவாகும்.
அதனுடன் ஒப்பிடுகையில், தற்போது பங்கு பரஸ்பர திட்டங்களில் முதலீட்டு வரவு 14 சதவீதம் குறைந்துள்ளது.
இருந்தாலும், பங்கு சாா்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் புதிய முதலீடு தொடா்ந்து 45-ஆவது மாதமாக நிகர வரவைப் பதிவு செய்துள்ளது. முதலீட்டாளா்களிடையே அந்த வகை முதலீட்டு திட்டங்களின் மீதான ஆா்வம் அதிகரித்து வருவதை இது குறிக்கிறது.
கடந்த அக்டோபரில் ரூ.25,323 கோடியாக இருந்த முறைசாா் திட்டங்களின் (எஸ்ஐபி) மீதான முதலீடு, நவம்பரில் சற்று குறைந்து ரூ.25,320 கோடியாக உள்ளது.
ஒட்டுமொத்தமாக பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு கடந்த அக்டோபா் மாதம் ரூ.2.4 லட்சம் கோடி நிகர வரவைக் கண்டிருந்தது. நவம்பா் மாதத்தில் அது ரூ.60,295 கோடி நிகர வரவாகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.