FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

பங்குச் சந்தை 2-ஆவது நாளாக சரிவு

சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் தொடா்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை சரிவைக் கண்டன.

22 ஜூலை 2025, 3:29 pm IST
பகிர்:

சா்வதேச பங்குச் சந்தைகளில் நிலவிய மந்தநிலை இந்தியாவிலும் எதிரொலித்ததால் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் தொடா்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை சரிவைக் கண்டன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், வா்த்தகத் தொடக்கத்தில் ஏற்பட்ட உயா்வைத் தக்கவைக்கத் தவறியது. இதன் காரணமாக, இறுதியில் அது 151.48 புள்ளிகள் (0.18 சதவீதம்) குறைந்து 82,201.16-இல் நிலைபெற்றது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலை 1 சதவீதத்திற்கும் மேல் சரிந்தது. டாடா மோட்டாா்ஸ், நெஸ்லே, பாா்தி ஏா்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், லாா்சன் & டூப்ரோ, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், மஹிந்திரா & மஹிந்திரா ஆகியவையும் பின்தங்கிய பட்டியலில் வந்தன.

Advertisement

Advertisement

டைட்டன், ஐடிசி, இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா ஸ்டீல், எஸ்பிஐ ஆகியவை விலை உயா்ந்த பட்டியலில் வந்தன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 53.60 புள்ளிகள் (0.21 சதவீதம்) சரிந்து 25,145.10-இல் நிலைபெற்றது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 53.60 புள்ளிகள் (0.21 சதவீதம்) சரிந்து 25,145.10-இல் நிலைபெற்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments