முகப்பு
வணிகம்

ஒடிசா நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்!

மத்திய அமைச்சரவை, ஒடிசாவில் உள்ள என்ஹெச்-326 நெடுஞ்சாலையை அகலப்படுத்தி வலுப்படுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

Updated On : 31 டிசம்பர், 2025 at 12:43 PM
கோப்புப் படம்
பகிர்:

புதுதில்லி: மத்திய அமைச்சரவை, ஒடிசாவில் உள்ள என்ஹெச்-326 நெடுஞ்சாலையை அகலப்படுத்தி வலுப்படுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், தற்போதுள்ள இருவழிச் சாலையானது 68.600 கி.மீ முதல் 311.700 கி.மீ வரையிலான பகுதியும் அதே வேளையில் ஈபிசி முறையில் நடைபாதை வசதியுடன் கூடிய இருவழி நெடுஞ்சாலையாக மேம்படுத்தப்பட உள்ளது.

இந்தத் திட்டத்திற்கான மொத்த செலவு ரூ.1,526.21 கோடியாகும். இதில் சிவில் கட்டுமானச் செலவு ரூ.966.79 கோடியாக இருக்கும். என்ஹெச்-326 நெடுஞ்சாலையை மேம்படுத்துவதன் மூலம், பயணம் வேகமாகவும், பாதுகாப்பாகவும், நம்பகத்தன்மையுடனும் மாறும்.

இது தெற்கு ஒடிசாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும், குறிப்பாக கஜபதி, ராயகடா மற்றும் கோராபுட் மாவட்டங்கள் பயனடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட சாலை இணைப்பின் மூலம், சந்தைகள், சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கான அணுகலை மேம்படுத்துவதும் அதே நேரத்தில், உள்ளூர் சமூகங்கள், தொழில்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா மையங்களுக்கு இந்த விரிவாக்கம் நேரடியாகப் பயனளிக்கும்.

அஸ்கா அருகே என்ஹெச்-59 உடன் தொடங்கி, மோகனா, ராய்பங்கா, அமலபாட்டா, ராயகடா, லட்சுமிபூர் வழியாக சென்று, ஒடிசாவில் உள்ள சிந்தூரு அருகே என்ஹெச்-30 உடன் இணையும் இடத்தில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

The Union Cabinet approved the widening and strengthening of NH-326 in Odisha, upgrading the existing two-lane stretch to a two-lane highway with paved shoulder from 68.600 km to 311.700 km.

முழு கட்டுரையைப் படிக்க →