முகப்பு
வணிகம்

நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் இ-ரிக்ஷா பிரிவில் நுழையும் பஜாஜ் ஆட்டோ!

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள், உள்நாட்டில் இ-ரிக்ஷா பிரிவில், நுழைய தயாராகி வருவதாக, நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Updated On : 9 பிப்ரவரி 2025, 11:07 pm IST
பஜாஜ் ஆட்டோ
பகிர்:

புதுதில்லி: பஜாஜ் ஆட்டோ நிறுவனமானது, நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள், உள்நாட்டில் இ-ரிக்ஷா பிரிவில், நுழைய தயாராகி வருவதாக, நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நடப்பு காலாண்டின் இறுதியில் நிறுவனமானது தனது இ-ரிக்ஷாவுக்கு ஒழுங்குமுறை அனுமதியை பெறும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது மாதத்திற்கு சுமார் 45,000 யூனிட்டுகள் என்ற அளவில் இருக்கும் என்றார் பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குநரான ராகேஷ் சர்மா.

Advertisement

Advertisement

இந்த நிதியாண்டின் இறுதிக்குள், மேலும் ஒரு நவீன 'இ-ரிக்ஷா'-வை அறிமுகப்படுத்த விரும்புகிறோம். இது இந்த பிரிவில் முற்றிலும் புதிய அனுபவத்தையும் தரும் வேளையில், பயணிகளுக்கு உயர்ந்த அளவிலான மனநிறைவை தரும் என்றார்.

இ-ரிக்ஷா பிரிவு கிட்டத்தட்ட ஆட்டோ பிரிவைப் போலவே பெரியது. அதே வேளையில் இ-ரிக்ஷா புதிய வணிகத்தை உருவாக்கும் என்றார்.

சரியான காலக்கெடு குறித்து கேட்டபோது, இந்த காலாண்டின் இறுதியில், ஆதாவது நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் இ-ரிக்ஷா அறிமுகப்படுத்தப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். மேலும் மூன்று சக்கர வாகன இயக்கத்தில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் இ-ரிக்ஷா பிரிவில் உள்ளது.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

ஒவ்வொரு மாதமும் சுமார் 45,000 இ-ரிக்ஷா விற்பனை செய்யப்படுகின்றன. அவை பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் வருகின்றன. அதில் பெரும்பாலானவை இறக்குமதி சார்ந்தவை. தேவை உள்ளது என்பதை வலியுறுத்திய ஷர்மா, எங்கள் இ-ரிக்ஷா அறிமுகப்படுத்துவதன் மூலம், இந்த சந்தையை ஒழுங்கமைத்து, நாங்கள் புதிய வணிகத்தை கொண்டு வருவோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.