முகப்பு
வணிகம்

ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை சரிவு!

ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில், டீலர்களுக்கு அனுப்பப்பட்ட கார்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு 11% சரிந்து 87,286 ஆக குறைந்துள்ளதாக ஜாகுவார் தெரிவித்துள்ளது.

Updated On : 7 ஜூலை 2025, 9:13 pm IST
பகிர்:

புதுதில்லி: ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில், கார்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு 11% சரிந்து 87,286 ஆக குறைந்துள்ளதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் தெரிவித்துள்ளது.

முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, ​​வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் முதல் காலாண்டில் மொத்த விற்பனை முறையே 12%, 14% மற்றும் 25% குறைந்துள்ளதாக ஜேஎல்ஆர் தெரிவித்துள்ளது.

பாரம்பரிய ஜாகுவார் மாடல்களை நிறுத்த திட்டமிட்டதால் இங்கிலாந்து சந்தை மிகவும் பாதிக்கப்பட்டதாக நிறுவனம் மேலும் தெரிவித்தது.

Advertisement

Advertisement

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலகட்டத்தில் அதன் சில்லறை விற்பனை 94,420 யூனிட்களாக இருந்ததாகவும், இது கடந்த நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 15 சதவிகிதம் குறைவு என்றும் பிரிட்டிஷ் மார்க்யூ பிராண்ட் தெரிவித்துள்ளது.

சவாலான காலாண்டைத் தொடர்ந்து நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப கார்களின் எண்ணிக்கையும் குறைத்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய ஜாகுவார் அறிமுகத்திற்கு முன்னதாக பாரம்பரிய ஜாகுவார் மாடல்களின் திட்டமிடப்பட்ட நிறுத்தத்தையும், அதனிடையில் அமெரிக்காவில் அதன் இறக்குமதி குறித்த வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஏப்ரல் 2025ல் முதல் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி நிறுத்தப்பட்டதையும் இது பிரதிபலிக்கிறது.

இன்றைய வர்த்தகத்தில் டாடா மோட்டார்ஸ் பங்குகள் பிஎஸ்இ-யில் ரூ.688.85 ஆக முடிவடைந்தது.

இதையும் படிக்க: டிவிஎஸ் ஜூபிடர் நேபாளத்தில் அறிமுகம்!

summary

Jaguar Land Rover said its dispatches to dealers declined by 11 per cent to 87,286 units for the first quarter ended June 30.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments