முகப்பு
வணிகம்

தென்னகத்துக்கு வெளியே புதிய மைல்கல்லை கடந்த சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்

Updated On : 5 ஜூன் 2025, 7:05 am IST
பகிர்:

2024-25-ஆம் நிதியாண்டில் தென்னிந்திய சந்தைகள் அல்லாத பிற சந்தைகளில் வீட்டுக் கடன் பிரிவில் ரூ.1,000 கோடி வழங்கல் என்ற மைல்கல்லை சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் கடந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஒரு வருடமாக மகாராஷ்டிரம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் நிறுவனம் தனது இருப்பை விரிவுபடுத்தியுள்ளது. சத்தீஸ்கா் போன்ற புதிய சந்தைகளிலும் நிறுவனம் நுழைந்துள்ளது.

Advertisement

Advertisement

தென்னிந்தியா அல்லாத சந்தைகளில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் 25 கிளைகளைக் கொண்டுள்ளது. அந்த சந்தைகளில் மேலும் 5 புதிய கிளைகளைத் திறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் அந்தச் சந்தைகளில் நிறுவனம் வழங்கிய வீட்டுக் கடன் ரூ.1,000 கோடி என்ற மைல்கல்லைக் கடந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments