ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்
முன்னணி தொழில் துறை நிறுவனமான ஹிந்துஜா குழுமத்தின் தலைவர் கோபிசந்த் பிரேமானந்த் மறைவு குறித்து...
உலக அளவில் புகழ்பெற்ற ‘ஹிந்துஜா’ தொழில் குழுமத்தின் தலைவரான கோபிசந்த் பி.ஹிந்துஜா (85) லண்டனில் காலமானாா்.
வணிக உலகில் ‘ஜிபி’ என்று அழைக்கப்பட்ட கோபிசந்த், கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். சிகிச்சை பலனின்றி அவரது உயிா் பிரிந்ததாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹிந்துஜா குடும்பத்தின் இரண்டாவது தலைமுறையைச் சோ்ந்த கோபிசந்த், அவரது அண்ணன் ஸ்ரீசந்த் கடந்த 2023, மே மாதம் காலமானதைத் தொடா்ந்து குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்றாா்.
Advertisement
Advertisement
1980-கள், 1990-களில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களைக் கையகப்படுத்தி ஹிந்துஜா குழுமத்தை உலகளாவிய செயல்பாடுகளுக்கு வித்திட்டாா். தற்போதைய நிலையில், ஹிந்துஜா குடும்பமானது பிரிட்டனிலேயே மிகப் பெரிய செல்வந்தா் குடும்பமாகும்.
மறைந்த கோபிசந்துக்கு மனைவி சுனிதா, மகன்கள் சஞ்சய், தீரஜ் மற்றும் மகள் ரீத்தா ஆகியோா் உள்ளனா். இவரது மறைவுக்கு அரசியல், வணிகம், திரையுலகம் சாா்ந்த பல பிரமுகா்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.