தொழில் துறை நிறுவனமான ஹிந்துஜா குழுமத்தின் தலைவர் கோபிசந்த் பிரேமானந்த் லண்டனில் உள்ள மருத்துவமனையில் இன்று (நவ. 4) காலமானார்.
தனது மூத்த சகோதரர் எஸ்.பி. ஹிந்துஜா மறைவுக்கு பிறகு, ஹிந்துஜா குழுமத்தின் தலைவராக கோபிசந்த் ஹிந்துஜா பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.
ஹிந்துஜா குழுமத்தின் 4 சகோதர்களில் இரண்டாவது சகோதரரான கோபிசந்த் பிரேமானந்த், குடும்பத்தின் வணிகத்தை உலக அரங்கில் கொண்டுசென்றதில் முக்கியப் பங்காற்றியவர். ஆட்டோமொபைல், எண்ணெய், வங்கி மற்றும் சுகாதாரத் துறையில் ஹிந்துஜா குழுமம் கால் பதித்து பெரும் வளர்ச்சியடைந்ததில் கோபிசந்த் பிரேமானந்தின் பங்கு அளப்பறியது.
ஜிபி என்று பலரால் அழைக்கப்படும் கோபிசந்த் பிரேமானந்த், கடந்த சில வாரங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், லண்டன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு மனைவி சுனிதா, மகன்கள் சஞ்சய் மற்றும் தீரஜ் மற்றும் மகள் ரீட்டா ஆகியோர் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.