முகப்பு
வணிகம்

ஈ.எஃப்.சி இந்தியா 2-வது காலாண்டு லாபம் 55% உயர்வு!

ஈ.எஃப்.சி இந்தியா லிமிடெட் செப்டம்பர் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 55% அதிகரித்து ரூ.56.71 கோடியாக உள்ளதாக இன்று அறிவித்தது.

Updated On : 12 நவம்பர் 2025, 8:12 pm IST
பகிர்:

புதுதில்லி: ஈ.எஃப்.சி இந்தியா லிமிடெட் செப்டம்பர் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 55% அதிகரித்து ரூ.56.71 கோடியாக உள்ளதாக இன்று அறிவித்தது.

கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.36.56 கோடியாக இருந்தது.

இந்த நிதியாண்டின் 2-வது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.256.81 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.171.08 கோடியாக இருந்ததாக தெரிவித்தது.

Advertisement

Advertisement

முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த ஈ.எஃப்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் உமேஷ் சஹாய், நிறுவனம் அனைத்து பிரிவுகளிலும் வலுவான வளர்ச்சியைக் கண்டு வருவதாக தெரிவித்தார்.

புனேவில் ஒரு புதிய பாஸ்போர்ட் சேவா கேந்திராவும், அலுவலக பிரிவில் மூன்று பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு பாதுகாப்பான விற்பனையாளர் பதிவு செய்யும் வழிமுறையும் நாங்கள் வென்று உள்ளோம் என்றார்.

2014ல் நிறுவப்பட்டு, புனேவை தளமாகக் கொண்ட ஈ.எஃப்.சி இந்தியா, நிர்வகிக்கப்பட்ட அலுவலக இடங்கள், உட்புற வடிவமைப்பு மற்றும் உற்பத்தி சேவைகளை வழங்கி வருகிறது.

இதையும் படிக்க: ஸ்ரீராம் பிராபர்டீஸ் நிறுவனத்தின் 2-வது காலாண்டு லாபம் ரூ.8.57 கோடி!

summary

Co-working firm EFC (I) Ltd has reported a 55 per cent increase in its consolidated net profit to Rs 56.71 crore in the September quarter on higher revenue.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments