டிஷ் டிவியின் Q2 நிகர இழப்பு ரூ.132.65 கோடியாக உயர்வு!
டிஷ் டிவி இந்தியா லிமிடெட் செப்டம்பர் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர இழப்பு ரூ.132.65 கோடியாக அதிகரிப்பு.
புதுதில்லி: மாற்று பொழுதுபோக்கு விருப்பங்கள் அதிகரிப்பு, பணவீக்க அழுத்தங்கள் மற்றும் நாணய மதிப்பு சரிவு ஆகியவற்றின் காரணமாக, டிஷ் டிவி இந்தியா லிமிடெட் நிதியாண்டின் செப்டம்பர் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர இழப்பு ரூ.132.65 கோடியாக அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதுவே கடந்த வருடம் ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் நிறுவனம் ரூ.37.38 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளது. செப்டம்பர் வரையான காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டின் மூலம் அதன் வருவாய் 27.41% குறைந்து ரூ.291.13 கோடியாக இருந்தது.
டிஷ் டிவியின் மொத்த செலவுகள் ரூ.431.94 கோடியாக இருந்தது. இது நிதியாண்டின் 2-வது காலாண்டில் 1.3% குறைந்துள்ளது. அதே வேளையில் செப்டம்பர் வரையான காலாண்டில், அதன் சந்தா வருவாய் ரூ.232.4 கோடியாக இருந்தது.
Advertisement
Advertisement
அதேபோல், அதன் செயல்பாட்டு வருவாய் செப்டம்பர் வரையான காலாண்டில் 26.4% குறைந்து ரூ.291.1 கோடியாக உள்ளது. இருப்பினும், செயல்பாட்டு வருவாயில், டிஷ் டிவி விளம்பர வருவாய் செப்டம்பர் காலாண்டில் இருமடங்காக அதிகரித்து ரூ.10.3 கோடியாக இருந்தது.
அனைத்து வருமானங்களையும் உள்ளடக்கிய டிஷ் டிவியின் மொத்த வருமானம் செப்டம்பர் வரையான காலாண்டில் ரூ.299.29 கோடியாக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு 25.28% சரிவு. அதே வேளையில் நிதியாண்டின் முதல் பாதியில், அதன் மொத்த ஒருங்கிணைந்த வருமானம் ரூ.633.40 கோடியாக இருந்தது.
டிஷ் டிவி இந்தியா லிமிடெட் பங்குகள் முந்தைய முடிவை விட 0.22% குறைந்து, பிஎஸ்இ-யில் ரூ.4.48 ஆக முடிவடைந்தன.
இதையும் படிக்க: குஜராத் கனிம மேம்பாட்டுக் கழகத்தின் Q2 லாபம் 264% உயர்வு!
Direct-to-home firm Dish TV India Ltd on Friday reported a widening of its consolidated net loss to Rs 132.65 crore in the September quarter of FY26 .
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.