மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!
மின்சார நுகர்வில் ஏற்பட்ட மாற்றத்தின் பின்னணியில் வரும் நாள்களில் நிலக்கரித் தேவை அதிகரிக்கும்.
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 7:43 PM
புதுதில்லி: நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் மந்தமாக இருந்த நிலக்கரித் தேவையானது, மின்சார நுகர்வில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தின் பின்னணியால், வரும் நாட்களில் நிலக்கரித் தேவை அதிகரிக்கும்.
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மின்சார நுகர்வு சரிந்த நிலையில், டிசம்பர் மாதத்தில் மின் தேவை 6.3 சதவீத வளர்ச்சியுடன் வலுவான மீட்சி நோக்கி சென்றது. இதற்கிடையில் குளிர்காலம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக ஜனவரி மாதத்தில் மின் நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் நிலக்கரித் தேவை அதிகரிக்கும்.
summary