டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ.91.88 ஆக நிறைவு!
ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ.92 ஆக சரிந்து பிறகு சற்றே மீண்டு, டாலருக்கு நிகரான ரூ.91.88 என்ற அளவில் நிலைபெற்றது.
மும்பை: நிறுவனங்களின் விற்பனை அழுத்தம் மற்றும் உலகளாவிய பங்குச் சந்தைகளில் நிலவும் எதிர்மறையான எண்ணம் உள்ளிட்டவையால் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ.92 ஆக சரிந்து, பிறகு சற்றே மீண்டு ரூ.91.88ஆக நிலைபெற்றது.
பலவீனமான உள்நாட்டுச் சந்தைகள் மற்றும் தொடர்ந்து வெளியேறி வரும் வெளிநாட்டு நிதி உள்ளிட்டவையால், இந்திய ரூபாய் தனது ஆரம்பகால நிலையை இழந்து, டாலருக்கு நிகரான ரூ.91.99 என்ற புதிய வரலாற்றுச் சரிவை எட்டியதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட உயர்வு மற்றும் அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாயில் ஏற்பட்ட அதிகரிப்பும் ரூபாயின் மதிப்பை மேலும் பாதித்தன.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணிச் சந்தையில், ரூபாயின் மதிப்பு ரூ.91.45 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கியது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.91.41 என்ற நாளின் உச்சத்தை எட்டிய பிறகு ரூ.92 என்ற வரலாறு காணாத நாளின் குறைந்தபட்ச அளவை தொட்ட நிலையில், முந்தைய நாள் இறுதி நிலையிலிருந்து 30 காசுகள் குறைந்து ரூ.91.88ஆக வர்த்தகம் நிறைவடைந்தது.
Advertisement
Advertisement
நேற்றைய வர்த்தகத்தில் (வியாழக்கிழமை) ரூபாயின் வரலாறு காணாத குறைந்தபட்ச நிலையிலிருந்து மீண்டு, டாலருக்கு நிகரான 7 காசுகள் உயர்ந்து ரூ.91.58 என்ற அளவில் இருந்தது.
The rupee hit an all-time low of 92 on Friday and recovered marginally to settle at 91.88 against the American currency.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.