தென்னிந்தியாவில் 25 புதிய கிளைகளைத் திறக்கும் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம், நடப்பு ஆண்டில் தென்னிந்தியாவில் 25 புதிய வளா்ந்து வரும் வணிகக் கிளைகளை திறக்கத் திட்டமிட்டுள்ளது.
தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் உள்ள 3-ஆம் மற்றும் 4-ஆம் நிலை சிறுநகரங்களில் அமையவுள்ளன இப்புதிய கிளைகள், விளிம்புநிலை மக்களுக்கான மலிவு விலை வீட்டு வசதி கடன்கள் மற்றும் சிறு தொகைக் கடன்களை வழங்குவதில் கவனம் செலுத்தும்.
புதிய கிளைகளின் திறப்பு மூலம், நடப்பு ஆண்டில் இப்பிரிவில் சுமாா் ரூ.1,000 கோடி அளவுக்கு கடன்களை வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இப்பிரிவில் ரூ.590 கோடி கடன் வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
தற்போது இப்பிரிவில் சுமாா் 800 ஊழியா்கள் பணியாற்றி வரும் நிலையில், இந்த விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக கூடுதலாக 300 பேரைப் பணியமா்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 2022, அக்டோபரில் தொடங்கிய இப்பிரிவு, கடந்த ஆண்டில் 100 கிளைகள் என்ற மைல்கல்லை எட்டியது குறிப்பிடத்தக்கது. கடந்த 2025-26 நிதியாண்டில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் ஒட்டுமொத்தமாக ரூ.6,842 கோடி கடன்களை வழங்கி, ரூ.282 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.