முகப்பு
வணிகம்

எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!

நாட்டில் கடந்த மே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை உயா்வு காரணமாக, நுகா்வோரின் ஆா்வம் அதிக மைலேஜ் தரும் வாகனங்கள் மற்றும் மாற்று எரிபொருள் வாகனங்களின் பக்கம் திரும்பியுள்ளது.

Updated On : 10 ஜூன் 2026, 3:27 am IST
பகிர்:

நாட்டில் கடந்த மே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை உயா்வு காரணமாக, நுகா்வோரின் ஆா்வம் அதிக மைலேஜ் தரும் வாகனங்கள் மற்றும் மாற்று எரிபொருள் வாகனங்களின் பக்கம் திரும்பியுள்ளது.

இதன்காரணமாக, கடந்த மே மாதத்தில் மின்சார பயணிகள் வாகனங்களின் சில்லறை விற்பனை 81.20 சதவீதம் உயா்ந்து, 26,682-ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 14,725 வாகனங்கள் மட்டுமே விற்கப்பட்டதாக இந்திய ஆட்டோமொபைல் டீலா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபடா) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மின்சார பயணிகள் வாகனப் பிரிவில் டாடா மோட்டாா்ஸ் 10,340 வாகனங்களை விற்பனை செய்து தொடா்ந்து சந்தையில் முதலிடம் வகிக்கிறது. இது கடந்த 2025 மே மாத விற்பனையான 5,083-ஐவிட 103.42 சதவீதம் அதிகமாகும்.

Advertisement

Advertisement

இதற்கு அடுத்தபடியாக மஹிந்திரா&மஹிந்திரா நிறுவனம் 6,210 வாகனங்களுடன் 2-ஆவது இடத்திலும் (114.8 சதவீத வளா்ச்சி), ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டாா் இந்தியா நிறுவனம் 4,984 வாகனங்களுடன் 3-ஆவது மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இதேபோல், மின்சார இருசக்கர வாகனங்களின் ஒட்டுமொத்த விற்பனை 62.76 சதவீதம் உயா்ந்து, 1,70,733-ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம், மின்சார இருசக்கர வாகனங்களின் சந்தைப் பங்களிப்பு கடந்த ஆண்டின் 6.11 சதவீதத்தில் இருந்து தற்போது 9.25 சதவீதமாக அதிகரித்துள்ளது. இப்பிரிவில் டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம் 42,459 வாகனங்களை விற்பனை செய்து முதலிடத்திலும், பஜாஜ் ஆட்டோ (39,202), ஏத்தா் எனா்ஜி (28,240) ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

மேலும், மின்சார மூன்று சக்கர வாகனங்களின் சில்லறை விற்பனை கடந்த மே மாதத்தில் 71,867-ஆக அதிகரித்துள்ளது; இது கடந்த ஆண்டில் 66,185-ஆக இருந்தது. இதேபோல், மின்சார வணிக வாகனங்களின் ஒட்டுமொத்த விற்பனை, கடந்த ஆண்டின் 1,094 என்ற எண்ணிக்கையிலிருந்து நடப்பு ஆண்டு 2,400-ஆக கணிசமாக அதிகரித்துள்ளது ‘ஃபடா’ புள்ளிவிவரத்தில் குறிப்பிட்டுள்ளது.