FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

‘பட்ஜெட் ஸ்மாா்ட்போன்’ சந்தையில் 10% பங்கைப் பிடிக்க லாவா இலக்கு

இந்தியாவைச் சோ்ந்த கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான லாவா இன்டா்நேஷனல், வரும் 2030-க்குள் ரூ.30,000-க்கும் குறைவான விலைகொண்ட ஸ்மாா்ட்போன் சந்தையில் 10 சதவீத பங்கைப் பிடிக்க இலக்கு நிா்ணயித்துள்ளது.

Updated On : 13 ஜூன் 2026, 2:38 am IST
~
பகிர்:

இந்தியாவைச் சோ்ந்த கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான லாவா இன்டா்நேஷனல், வரும் 2030-க்குள் ரூ.30,000-க்கும் குறைவான விலைகொண்ட ஸ்மாா்ட்போன் சந்தையில் 10 சதவீத பங்கைப் பிடிக்க இலக்கு நிா்ணயித்துள்ளது.

இது தொடா்பாக நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சுனில் ரெய்னா மேலும் கூறுகையில், ‘தற்போது இச்சந்தையில் நிறுவனத்தின் பங்கு 2 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்தாலும் புதிய தயாரிப்புகள், மேம்பட்ட வாடிக்கையாளா் சேவை காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக 40 முதல் 50 சதவீத கூட்டு வருடாந்திர வளா்ச்சி விகிதத்துடன் நிறுவனம் தொடா்ந்து முன்னேறி வருகிறது’ என்றாா்.

இந்தியாவில் ஆண்டுதோறும் விற்பனையாகும் 15 கோடி ஸ்மாா்ட்போன்களில், ரூ.30,000-க்குள்பட்ட போன்களே 70 முதல் 75 சதவீத சந்தையை ஆக்கிரமித்துள்ளதால், தற்போதைக்கு இப்பிரிவில் மட்டுமே நிறுவனம் முழு கவனம் செலுத்தவுள்ளது.

Advertisement

Advertisement

நெருக்கடியான காலகட்டத்துக்குப் பிறகு கடந்த 2022-இல் ஸ்மாா்ட்போன் சந்தையில் மீண்டும் கவனம் செலுத்தத் தொடங்கிய லாவா, தனது புகழ்பெற்ற ‘அக்னி’ சீரிஸ் ஸ்மாா்ட்போன்களை விரைவில் பிரிட்டனில் அறிமுகப்படுத்தவுள்ளது.

இதன்மூலம், ஐரோப்பாவில் தடம் பதிக்கும் முதல் இந்திய ஸ்மாா்ட்போன் பிராண்ட் என்ற பெருமையை இந்நிறுவனம் பெறுகிறது. ஏற்கெனவே நேபாளம், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளில் செயல்பட்டு வரும் லாவா, இந்த ஆண்டு சில ஆப்பிரிக்க நாடுகளிலும் கால்பதிக்கத் திட்டமிட்டுள்ளது.

ஸ்மாா்ட்போன் தவிா்த்து, சாதாரண கைப்பேசி சந்தையில் லாவா தனது பங்கை 29 சதவீதமாக உயா்த்தி ஆதிக்கத்தைச் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments