முகப்பு
வணிகம்

நிதியாண்டின் கணக்குகளுக்கு ஒப்புதல் அளிக்க கூடிய டாடா சன்ஸ் வாரியம்!

டாடா சன்ஸ் வாரியம், ஆண்டு கணக்குகள் மற்றும் ஈவுத்தொகையை ஆய்வு செய்து ஒப்புதல் அளிப்பதற்காக கூடியதாக தெரிவித்தது.

Updated On : 12 ஜூன் 2026, 7:33 pm IST
பகிர்:

மும்பை: உப்பு முதல் மென்பொருள் வரை தயாரிக்கும் டாடா குழுமத்தின் நிறுவனமான டாடா சன்ஸ் வாரியம், ஆண்டு கணக்குகள் மற்றும் ஈவுத்தொகையை ஆய்வு செய்து ஒப்புதல் அளிப்பதற்காக இன்று கூடியதாக நிறுவனம் தெரிவித்தது.

குழுமத் தலைவர் என். சந்திரசேகர், டாடா அறக்கட்டளைத் தலைவர் நோயல் டாடா மற்றும் டாடா அறக்கட்டளைத் துணைத் தலைவர் வேணு சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டம், நிறுவனத்தின் தலைமையகமான பாம்பே ஹவுஸில் நடைபெற்றது.

காலை 11 மணிக்குத் தொடங்கிய இக்கூட்டம், சுமார் 4 மணி நேரம் நீடித்ததாகத் தகவல்கள் வெளியாகியது.

Advertisement

Advertisement

டாடா அறக்கட்டளை, பல்வேறு நிறுவனங்கள் மூலம் டாடா சன்ஸில் 66 சதவீத பெரும்பான்மைப் பங்குகளைக் கொண்டுள்ளது. இதற்கிடையில், நிதியாண்டு 2026-க்கான நிறுவனத்தின் ஆண்டு கணக்குகளுக்கு வாரியம் ஒப்புதல் அளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

summary

The Board of Tata Sons, met to review and approve the annual accounts and dividend.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.