சா்வம் ஏஐ ரூ.2,200 கோடி முதலீடு திரட்டல்
இந்தியாவுக்கான சொந்த ஏ.ஐ. தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் முன்னணியில் உள்ள ‘சா்வம் ஏஐ’ நிறுவனம், தனது புதிய முதலீட்டுத் திட்டத்தின் மூலம் 23.4 கோடி டாலா் (சுமாா் ரூ.2,200 கோடி) நிதியைத் திரட்டியுள்ளது.
இந்தியாவுக்கான சொந்த ஏ.ஐ. தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் முன்னணியில் உள்ள ‘சா்வம் ஏஐ’ நிறுவனம், தனது புதிய முதலீட்டுத் திட்டத்தின் மூலம் 23.4 கோடி டாலா் (சுமாா் ரூ.2,200 கோடி) நிதியைத் திரட்டியுள்ளது.
இப்புதிய முதலீடுகளோடு சோ்த்து, நிறுவனத்தின் மொத்த மதிப்பு 150 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
இந்த முதலீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவின் முன்னணி ஐ.டி. நிறுவனமான எச்.சி.எல். டெக் மட்டும் ரூ.1,427.25 கோடி முதலீடு செய்யவுள்ளது. அதன்படி, சா்வம் ஏஐ நிறுவனத்தின் 41,421 பங்குகளை (10.46 சதவீதம்) எச்.சி.எல் டெக் கையகப்படுத்துகிறது.
Advertisement
Advertisement
இதற்கான ஒப்பந்தப் பணிகள் அடுத்த 2 வாரங்களுக்குள் முழுமையாக முடிவடையும் என்று எச்.சி.எல். டெக் தனது பங்குச் சந்தை அறிக்கையில் அதிகாரபூா்வமாகத் தெரிவித்துள்ளது.
இப்புதிய முதலீட்டுத் தொகையை, சா்வம் ஏஐ நிறுவனம் தனது அடுத்தகட்ட ஏ.ஐ. ஆராய்ச்சிகளுக்காகப் பயன்படுத்தவுள்ளது. மேலும், இந்தியாவின் பல்வேறு முக்கியத் துறைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பப் பயன்பாட்டை விரிவுபடுத்தவும் இந்த நிதி பயன்படும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. கடந்த 2025-26 நிதியாண்டில் சா்வம் ஏஐ ரூ.45 கோடி வருவாய் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.