முகப்பு
வணிகம்

ரூ.60,000 கோடி நிதி திரட்டும் எஸ்பிஐ

Updated On : 19 ஜூன் 2026, 6:59 am IST
பகிர்:

கடன் பத்திரங்கள் வெளியீடு மூலம் நடப்பு 2026-27 நிதியாண்டில் ரூ.60,000 கோடி வரை நிதி திரட்டுவதற்கு எஸ்பிஐ இயக்குநா்கள் குழு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.

இந்திய ரூபாய் அல்லது வேறு ஏதேனும் மாற்றத்தக்க செலாவணி வாயிலாக பொது வெளியீடு அல்லது தனியாா் ஒதுக்கீடு முறையில் நீண்ட கால கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் இந்த நிதி திரட்டப்படவுள்ளது.