முகப்பு
வணிகம்

உரசினால் தீப்பிடிக்கும் ஷூ! எங்கு வாங்குவது? என்ன விலை?

தீக்குச்சியைக் கொண்டு உரசினால் தீப்பிடிக்கும் வகையிலான ஷூ, சந்தையில் அறிமுகமாகியுள்ளது குறித்து...

Updated On : 25 ஜூன் 2026, 1:21 pm IST
உரசினால் தீப்பிடிக்கும் மாச்சிஸ் ஷூ - படம் / நன்றி - கோமெட்
பகிர்:

தீக்குச்சியைக் கொண்டு உரசினால் தீப்பிடிக்கும் வகையிலான ஷூ, சந்தையில் அறிமுகமாகியுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த ஷூ தயாரிப்பு நிறுவனமான கோமெட் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையிலான ஷூக்களை அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வகையில் தற்போது இளம் தலைமுறையினரைக் கவரும் வகையிலும் ட்ரெக்கிங் செல்பவர்களைக் கவரும் வகையிலும் உரசினால் தீப்பிடிக்கும் ஷூவை அறிமுகம் செய்துள்ளது.

Advertisement

Advertisement

மாச்சிஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஷூக்களின் முன், பின், பக்கவாட்டுப் பக்கங்களின் பல்வேறு இடங்களில் தீக்குச்சியை கொண்டு உரசினால் தீப்பிடிக்கும்.

இந்திய தீப்பெட்டி வடிவங்களை ஈர்ப்பாகக் கொண்டு இந்த ஷூக்களை கோமெட் நிறுவனம் தயாரித்துள்ளது. தீப்பெட்டியின் வண்ணத்தில் மற்றும் பழுப்பு நிற மெல்லிய தோல் வடிவில் புறத்தோற்றத்தை வடிவமைத்துள்ளது. லிமிடட் எடிஷனாக குறைந்த் எண்ணிக்கையில் ஷூக்களை தயாரித்துள்ளது. இதன் விலை ரூ. 5,899.

துரந்தர் படத்தில் நாயகன் ரன்வீர் சிங் தனது ஷூவில் இருந்து தீக்குச்சியை பற்றவைப்பார். அதனை மூலமாகக் கொண்டு இந்த ஷூவுக்கான விளம்பரமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பழைய ஹிந்தி மற்றும் தமிழ்ப் படங்களில் ஷூவில் தீக்குச்சியை பற்றவைப்பது ஒரு ஸ்டைலான காட்சியாகவே இடம்பெற்றிருக்கும்.

இதனால் பாலிவுட்டின் கிளாசிக் உணர்வையும் இளம் தலைமுறையினரிடையே கொண்டுவரும் முயற்சியாக இந்த ஷூவை கோமெட் நிறுவனம் விளம்பரம் செய்து வருகிறது.

summary

Bengaluru company comet introduced World’s First Match-lighting Sneaker

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments