FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

7,000mAh அதீத பேட்டரி... ரியல்மி 16 எக்ஸ் விற்பனை தொடக்கம்!

ரியல்மி நிறுவனத்தில் புதிதாக 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது குறித்து...

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 6:10 pm IST
ரியல்மி 16 எக்ஸ் - படம் / நன்றி - ரியல்மி
பகிர்:

ரியல்மி நிறுவனத்தில் புதிதாக 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.

ரியல்மி 16 எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளது. ரியல்மி இணைய தளத்திலும் ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்திலும் முன்பதிவு தொடங்கியுள்ளது.

ரெட்மிக்கு சற்றும் சளைக்காத வகையில் 7,000mAh பேட்டரி திறன், மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட், பெரிய திரை, செய்யறிவு தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாக பார்க்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

  • 4GB (RAM) உள்நினைவகம் + 128GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 25,999.

  • 6GB உள்நினைவகம் + 128GB உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 27,999

  • 6GB உள்நினைவகம் + 256GB உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 30,999

ரியல்மி 16 எக்ஸ் சிறப்புகள்

6.8 அங்குல எச்.டி. திரை உடையது.

திரை சுமூகமாக இயங்கும் வகையில் 144Hz திறன் கொண்டது.

திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 1,200 திறன் வழங்கப்படடுள்ளது.

மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் புராசஸர் உடையது.

பயன்படுத்தும்போது, கேம் விளையாடும்போது வெப்பமாவதை தவிர்க்கும் வகையில் 5,300 sq mm கூலிங் சேம்பர் கொடுக்கப்பட்டுள்ளது.

தூசி மற்றும் நீர் புகாத்தன்மைக்காக IP65 திறன் வழங்கப்பட்டுள்ளது.

ஏஐ அல்ட்ரா கிளாரிட்டி, ஏஐ எரேசர், ஏஐ மோஷன் போட்டோ என பல்வேறு ஏஐ அம்சங்களைக் கொண்டுள்ளது.

7,000mAh பேட்டரி திறன் உடையது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 45W திறன் உள்ளது.

summary

Realme 16x 5G smart phone launched with a massive 7,000mAh battery

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments