கோப்புப் படம். 
இந்தியா

ஆயுதங்கள், வெடிமருந்துகளுடன் பயங்கரவாத கூட்டாளி கைது!

DIN

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாத கூட்டாளி ஒருவரை பாதுகாப்புப் படையினர் இன்று கைது செய்து அவரிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை மீட்டனர்.

பாரமுல்லா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியான குப்வாரா மாவட்டத்தில் மே 20 ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவுக்கு 4 நாட்களுக்கு முன்னதாக ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.

சிறப்பு தகவலின் பேரில், ராணுவம், பி.எஸ்.எஃப் மற்றும் போலீஸாரின் கூட்டுக் குழு சோதனைச் சாவடியை அமைத்து, பயங்கரவாத கூட்டாளியான முஷ்டாக் அகமது லோனை குப்வாரா மாவட்டத்தில் உள்ள லோன் ஹரியில் கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சோதனையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள், 10 கையெறி குண்டுகள் மற்றும் 54 ஒன்பது மிமீ தோட்டாக்கள் ஆகியவற்றை பாதுகாப்புப் படையினர் மீட்டனர்.

இதனையடுத்து லோன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஞ்சி கோப்பை: கே.எல். ராகுல், படிக்கல் சதம்; கர்நாடகம் - 355/2

அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தின் பெயரில் இந்திய விவசாயிகளுக்கு நம்பிக்கை துரோகம்: ராகுல்!

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு! திரளான பக்தா்கள் தரிசனம்!

சதுரகிரி மலையேறிய பக்தா் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் புதிய ரயில் மேம்பாலத்தில் வாகனப் போக்குவரத்து தொடக்கம்

SCROLL FOR NEXT