ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாத கூட்டாளி ஒருவரை பாதுகாப்புப் படையினர் இன்று கைது செய்து அவரிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை மீட்டனர்.
பாரமுல்லா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியான குப்வாரா மாவட்டத்தில் மே 20 ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவுக்கு 4 நாட்களுக்கு முன்னதாக ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.
சிறப்பு தகவலின் பேரில், ராணுவம், பி.எஸ்.எஃப் மற்றும் போலீஸாரின் கூட்டுக் குழு சோதனைச் சாவடியை அமைத்து, பயங்கரவாத கூட்டாளியான முஷ்டாக் அகமது லோனை குப்வாரா மாவட்டத்தில் உள்ள லோன் ஹரியில் கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோதனையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள், 10 கையெறி குண்டுகள் மற்றும் 54 ஒன்பது மிமீ தோட்டாக்கள் ஆகியவற்றை பாதுகாப்புப் படையினர் மீட்டனர்.
இதனையடுத்து லோன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.